Monday, August 03, 2009

காற்றில்லா நாள்

நாட்களின் வசீகரங்கள் தொலைந்த
கடும்நெடி வீசும்
ஒரு பழுப்புநிற மாலையில்
சிமென்ட் பெஞ்சில்
சந்திக்கநேர்ந்தது
விழிமணியில் ரத்தம் தோய்ந்த
என்றோ சந்தித்த அவளை.

சில சில்லுகளே மீதமிருந்த
அவள் இதயத்தை ஒட்டவைக்க
பிரியங்கள் பூசிய
என் மென்சொற்களுக்காக
இளஞ்சூட்டு கண்ணீரை
என் தோளில் கொட்டினாள்.
கொஞ்சம் விசும்பல்கள் தாண்டி
காற்றற்ற மரமாய்
அமைதியாயிருந்தவள்
மெல்லிய புன்னகையோடு
தேங்க்ஸ் சொல்லி மறைந்தாள்.


உறங்கையில்
அத்தனை கடுமையில்லாத
வெறும் காற்றில்லா நாளாகிப்போனது
அன்றைய தினம்
.

-

5 comments:

  1. //சில சில்லுகளே மீதமிருந்த
    அவள் இதயத்தை ஒட்டவைக்க
    பிரியங்கள் பூசிய
    என் மென்சொற்களுக்காக
    இளஞ்சூட்டு கண்ணீரை
    என் தோளில் கொட்டினாள்.//

    அசத்தல் :-))

    ReplyDelete
  2. கவிதை உணர்வுமயமா ரொம்ப நல்லா இருக்கு காந்தி.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  4. நன்றி புனிதா

    நன்றி யாத்ரா

    நன்றி ஸ்ரீமதி

    நன்றி மண்குதிரை

    ReplyDelete