Wednesday, August 12, 2009

Achilles’ heel

நீயற்ற வாழ்வின் சமன்பாடுகளின்
விடைகளுக்காக
நெடுநாள் காத்திராமல்
இறந்துவிட்ட அன்பின்
இறுதிச்சடங்கில்
துக்கமோ
விரக்தியோ
அல்லது
எதுவெனத்தெரியாதவொன்றால்
விம்மி பின்
உடைந்து அழுது
புதைத்து திரும்பும் வழியில்
உனை
தொலைக்கவும்,
சுமக்கவுமியலாமல்
கூனல் விழுந்து
உன் கைக்குள்
சுருங்கிக்கொள்கிறேன்.

உனையும் புதைத்துவிட்டு வருவதாய்
சொல்லிவந்த
என் வீட்டு
கண்ணாடியிடம்
என்ன சொல்ல?

-

6 comments:

  1. கவிதை மிகுந்த வலி காந்தி.

    ReplyDelete
  2. மன்னிக்கவும் யாத்ரா

    ReplyDelete
  3. நன்றி மண்குதிரை

    ReplyDelete
  4. சோகம் வலி கூட சில நேரம் சுகம்தான்!!!

    ReplyDelete