Thursday, August 20, 2009

ஆதாம் பறித்த ஆப்பிள்

விழித்ததும்
பிரிந்ததுணரும் முன்னர்
உனை அழைக்க அழுத்தப்பட்டது தொடங்கி
முதல் ரிங்கிற்க்கு முந்தைய
மில்லி நொடியில்
எனை கவ்வ
காத்திருக்கிறது
ஒரு விலங்கு.
பேசும் முன் துண்டிக்கவைத்து
நிரம்பிவழியவிடும்
என் வெற்றிடங்களை.
விடுபடலோ
விடுதலையோ
சாத்தியமில்லை
அதனிடம்.
தெரிந்தே உன் எண்ணை
அழுத்தியவொரு
மதிய வேளையில்
பழகிய தாமதத்துடன் வந்து
உயிர் கத்தியழுது கதறியும்
என் தலை கவ்வி
துளித்துளியாய்
ரத்தம் சொட்ட
எல்லோருக்கும் பரிமாறும்
எல்லோரும் விரும்பியபடியே
நானில்லாத
அவர்களுக்கான என்னை.

-

6 comments:

  1. பேசும் முன் துண்டிக்கவைத்து
    நிரம்பிவழியவிடும்
    என் வெற்றிடங்களை.
    விடுபடலோ
    விடுதலையோ
    சாத்தியமில்லை...
    valiyai vaziya seyyum varigal
    arumai..!

    ReplyDelete
  2. நன்றி பல ஸ்ரீமதி, மண்குதிரை, யாழினி, நந்தா :)

    ReplyDelete
  3. முதல் ரிங்கிற்க்கு முந்தைய
    மில்லி நொடியில்
    எனை கவ்வ
    காத்திருக்கிறது
    ஒரு விலங்கு.

    விடுபடலோ
    விடுதலையோ
    சாத்தியமில்லை
    அதனிடம்.


    எல்லோருக்கும் பரிமாறும்
    எல்லோரும் விரும்பியபடியே
    நானில்லாத
    அவர்களுக்கான என்னை.


    ஆத்தாடி!... என்னாமாதிரியான lines... செத்தான் எதிரி.

    Super அப்பு.

    ReplyDelete