Monday, August 10, 2009

முடிவற்றவை

சிக்குண்டு கிடக்குமொரு
வெண்மதியப் பொழுதில்
மூடிய ஜன்னலிடுக்கில்
பீறிட்டெழும் ஒளிக்கீற்றில்
மிதந்து செல்லும்
தூசியின் நோக்கமுடையது
என் மனமெனும் பிராணி.
வெளியேற வழியற்ற
ஒளிதாண்டிய
ஓரிடத்தில்
இந்த கவிதையை போலவே
முடிவற்றிருக்கும்...

-

8 comments:

  1. அருமையான காட்சிப்படுத்தல் காந்தி, அருமையான கவிதை.

    ReplyDelete
  2. @cinz: Thanks. I promise :)

    -

    நன்றி யாத்ரா, இந்த கவிதை உங்களுக்கு பிடிக்கும்னு எதிர்பார்த்தேன் :)

    ReplyDelete
  3. ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் மிக எளிதில் வெளியிடலாம்.

    உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
    Add-தமிழ் விட்ஜெட் இணையுங்கள்.
    விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net

    ReplyDelete
  4. நன்றி புனிதா

    நன்றி ராம்

    ReplyDelete
  5. நன்றி மண்குதிரை

    ReplyDelete