Tuesday, February 19, 2013

ரௌத்திரம்





மண் தின்னும் செடியின்
எதோவொரு கார்பன் துகளில்
என்றாவது
வேர்புகுந்து
பெருக்கெடுத்து
மேலேறி
அக்னியாய் எரிந்தே தீரும்
என் ரௌத்திரம்!
அதுவரை
பழித் தினவடங்காது
அலைந்து கொண்டேயிருக்கும்
இன்று என்னுள்ளும்
மரித்து பின்
வேறு பிண்டத்திலோ
அல்லது
இன்னபிறவற்றிலோ
திரிந்துகொண்டேயிருக்கும்
நான் எனும்
நான்.