குளமொன்றின் முனகல்
கேட்டவொரு
ஞாயிறு பிற்பகல் கனவில்
புத்தர் தோன்றினார்.
அவர் கண்ட
நான்கு உண்மைகளை
தேஜஸ் வழிய
பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்,
லேசாகிக்கொண்டிருந்தது மனது...
அவர் போதிமரத்தடியில் இல்லை
எங்கு தேடியும்
போதி மரத்தை காணவேயில்லை,
அது புத்தராய் இருக்காதேன்று
எழுந்து
சோம்பல் முறித்துக்கொண்டேன்.
-