Tuesday, December 09, 2008

மகான்களின் புகைப்படங்கள்

‘சிறந்த மனிதர்கள்’ புத்தகம் படித்து
உணர்ச்சிப்பெருக்கில் வாங்கிய
புகைப்படத்தில்
என் சுவரில் உயிரோடிருந்த அந்த மகான்
சில மாதங்களுக்குள்
மரச்சட்டங்களுக்கான இடைவெளியில்
கொஞ்சம்கொஞ்சமாய் ஒழுகிவிட்டிருக்கிறார்.
இப்போதெல்லாம்,
அவர் அங்கிருப்பதாய் தெரிவதே இல்லை!

No comments:

Post a Comment