Tuesday, December 09, 2008

ஆழமாய்ப் புதைத்தல்

நிதானமாய் பலநாட்கள் யோசித்து
திடமான ஒருமுடிவென்று நினைத்துதான்
அன்றைய இரவில்
குளிரில் விரல்கள் எரிய
ஆழமாய் புதைத்தபின்
காலையில் முளைத்துநிற்கும் 
உன்மீதான என் காதலை
நீரூற்றி வளர்க்காமல்
என்ன செய்ய?

2 comments: