Tuesday, December 09, 2008

And then...

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
காத்திருக்கும் நமக்கான காதல்.
என்றாவது காதல் பேசுவோமென்று பல நாள் ஏமாந்து,
சலித்து நாம் சந்திக்கையில்
தென்படுவதேயில்லை.
அன்று விளையாட்டாய் பயந்து
எனை இறுகப்பிடித்து
நெடுநேரம் கழித்து நீ உணர்ந்தபோது
சத்தம் போடாமல் அருகே அமர்ந்திருந்தது!
இயல்பான அதன் சிரிப்புடன்
கைகுலுக்கி கண்ணடித்துச்சென்றுவிட்டது.

No comments:

Post a Comment