கூர்தலறம்

Thursday, December 18, 2008

பிரிவுப்பேச்சுகள்

தனித்தனியே பொறுக்கியெடுத்து
சபித்தபடி
பிரிவை பேசும்போது
அடிவயிற்றைக் கீறிப்பிளந்ததாகவோ
உயிர்கிழிக்க தொடங்கியதாகவோ
இதயம் கழற்றியெ
றியப்பட்டதாகவோ
அல்லது
வேறதையும் உணர்த்திப் போனதாகவோ
தெரியவில்லை

வெளிறியிருக்கும்
அந்த நாட்களின்
பின் மதியப்பொழுதில்
நாட்குறிப்பின் முடிந்துபோன பக்கமொன்றினுள்
பதித்துவைக்கிறேன்
உமிழமுடிந்த அனைத்து உணர்ச்சிகளையும்
எழுதாத பேனாவில்
பின்னொரு நாளில் அழுவதற்காக.

மறுபடி, மறுபடி
அவளை பார்க்க நேரிடும்
சூழலின் அபத்தங்களை
கு
ரூரமக்கிவிடுமோ
பிரிவுப்பேச்சுகள்
பிரியும்வரை?


  • உயிரோசையில் பிரசுரமான கவிதை
Share |
25 comments
Labels: உயிரோசை, கவிதை

Tuesday, December 09, 2008

சிதறல்கள்

ஒரு மழைநாளில்
என் தெருவாசியான அந்த நாய்
செம்மண் நிறத்தில் ரெண்டு,
கருப்புவெள்ளையாய் ஒன்று
பெயர்தெரியாத நிறத்தில் மூன்றென
ஆறு குட்டிகள் ஈன்றிருந்தது.

ஒருநாள் ஆபீஸிலிருந்து திரும்பும்போது,
கருப்புவெள்ளை குட்டி
எதனாலேயோ இறந்திருந்தது.
செய்தித்தாள்களின் விளையாட்டுச் செய்திபோல்
விரும்பாமலும் கண்ணில் பட்டுத்தொலைத்தது.

அதைப்பார்த்த அவள்
சிலநாள் பாசத்திற்கு
வீடுவந்ததும்
தேம்பி அழுதாள்.
மணி பார்த்தவுடன்
கண்துடைத்து
வெங்காயம் வாங்கிவரச்சொல்லிவிட்டு
சமைக்கச்சென்றுவிட்டாள்.

வெங்காயம் வாங்கித் திரும்புகையில்
எங்கேயோ போயிருந்த
இறந்துப்போனதின் அம்மா
வந்து
அதை முகர்ந்துவிட்டு
அதற்கான உணவை
சாப்பிடச்சென்றுவிட்டது.

வீடுவந்ததும்,
கத்தரிக்காய் வதக்கிக்கொண்டிருந்த
அவளின் சேலை வசீகரமாய்
விலகி இருந்தது.
வெங்காயம் கொடுத்துவிட்டு
காதோரமாய் முத்தமிட்டதும்
வெட்கப்பட்டாள்.

ஏதோ டிவியின்
வானிலயறிக்கையில்
நாளை மீண்டும் மழைவருமென்றது.

Share |
16 comments
Labels: கவிதை

தன்வினை

ப்ராஜெக்ட் முடிக்க
ஓவர் டைமில் வேலைசெய்து திரும்பும் அவள்
பேச்சுத்துணைக்கு போன் செய்திருந்தாள்.
வழிதோறும் நடந்தவைகளை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கையில்
எதிர்ப்பட்ட
நொண்டி பிச்சைக்காரன்,
பீடி பிடிக்கும் ஆட்டோக்காரன்,
மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்
மேல் பட்டன் போடாத எவனோஒருவனென
எவருமே
நல்லவராய் தெரியவில்லையெனக்கு
அவள் வீடு சேரும்வரை.

அன்றொருநாள்
இரவு பதினொரு மணிவாக்கில்
இளஆரஞ்சு நிற சுடிதாரணிந்து
மாநிறமாய்
நீள்வட்ட முகத்தில்
அழகிய உதட்டுடன்
எனைப்பார்த்ததும்
மிரண்டு வேகமாய் நகர்ந்த எவளயோ
எதேச்சையாய் நினைவுக்கு வந்தது.

சட்டென்று
இந்த இரு சம்பவத்துக்கும்
சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டது
உள்ளிருந்து ஏதோ
 

  • உயிரோசையில் பிரசுரமான கவிதை
Share |
4 comments
Labels: உயிரோசை, கவிதை

சுருக்கங்கள்

நண்பர்களுடனான அன்றைய பயணத்தில்
திரும்பக் கூப்பிட
அவள் கொடுத்த மிஸ்டு காலின்பின்
சிக்னல் தீர்ந்த 500 மீட்டர் தூரத்தில்
வேகமாய் போக
பஸ் டிரைவரையும்
டென்ஷன் தெரியாமல்
ஜோக்கடிக்கும் நண்பனையும்
டவர் வைக்காத
செல்போன் காரர்களையும்
திட்டி தீர்த்து,
சிக்னல் கிடைத்தபின்
நான் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்
தொடர்பிலக்கிற்கு வெளியே இருப்பதாய்
சொல்லும் ரெக்கார்டடு மேசேஜிக்கப்பறம்
காலருகில் கூடை வைத்ததற்க்காய்
மோர்கார பாட்டியை திட்டியதும்
நடப்பதற்கு வழிவிட்டு ஓரமாய் வைத்ததாய்
மன்னிக்கும்படி அவள் சொல்ல,
நான் சாரி சொல்லிவிட்டு
ரெண்டு ரூபாய்க்கு மோர் வாங்கி குடித்தபின்தான்
தணிந்தது
என் கோபமும்
பாட்டியின் இறுக்கமும்.
Share |
0 comments
Labels: கவிதை

தனிமை

நீ தெரியாதபோது
தகித்து எரிந்த இரவுகளில்
உனை தெரியாத தனிமை
ஒரு எதிரியாய் கடந்துசென்றது

நீ இருந்தபோது
நீ இல்லாத நேரங்களில்
அதே அழுத்தத்தின்
வேறு பரிமாணத்தில்
ஒரு மேகமாய் மாறி விட்டிருந்தது

நீ அருகிலிருக்கும்போது
நானில்லா உன் புகைப்படங்களில்
எட்டிப்பார்த்துவிடுகிறது என் தனிமை
எதிர் வீட்டு நாய்க்குட்டியாய்

எதேதோ சொல்லி
உன் கண்ணீரில் நம் காதலை
கரைத்த அந்த இரவிலிருந்து
ஒரு நண்பனாய் அருகே படுத்துக்கிடந்தது

இப்படி
தனிமையோடு சேர்ந்திருந்ததில்
என்னுடன் பழகிவிட்டிருந்தது
இப்போதெல்லாம்
என்னை விட்டு எங்கும் பிரிந்துபோவதேயில்லை
பர்சில் யாருக்கும் தெரியாமல்
வைத்திருக்கும் 
என் ராசியான கடவுள்போல.

Share |
2 comments
Labels: கவிதை

மகான்களின் புகைப்படங்கள்

‘சிறந்த மனிதர்கள்’ புத்தகம் படித்து
உணர்ச்சிப்பெருக்கில் வாங்கிய
புகைப்படத்தில்
என் சுவரில் உயிரோடிருந்த அந்த மகான்
சில மாதங்களுக்குள்
மரச்சட்டங்களுக்கான இடைவெளியில்
கொஞ்சம்கொஞ்சமாய் ஒழுகிவிட்டிருக்கிறார்.
இப்போதெல்லாம்,
அவர் அங்கிருப்பதாய் தெரிவதே இல்லை!
Share |
0 comments
Labels: கவிதை

நேயர் விருப்பம்

மதம், இனம், மொழி பார்த்து
நிச்சயித்து
அம்மி மிதித்து, அருந்ததியும் பார்த்து
முடிந்துவிட்ட நம் திருமணத்தின்
களவி மயக்கத்தை கடந்துவிட்ட பின்
அன்றோருநாளின் நம் உக்கிர சண்டையில்
தூங்காமல் விழித்திருந்த நடுஇரவில்
டிவியில் ஒளிபரப்பானது
கல்லூரியில் எனை யாசித்தவளுக்கு
பிடித்தபாடல்கள்…
நேயர்விருப்பமாய்!
Share |
0 comments
Labels: கவிதை

And then...

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
காத்திருக்கும் நமக்கான காதல்.
என்றாவது காதல் பேசுவோமென்று பல நாள் ஏமாந்து,
சலித்து நாம் சந்திக்கையில்
தென்படுவதேயில்லை.
அன்று விளையாட்டாய் பயந்து
எனை இறுகப்பிடித்து
நெடுநேரம் கழித்து நீ உணர்ந்தபோது
சத்தம் போடாமல் அருகே அமர்ந்திருந்தது!
இயல்பான அதன் சிரிப்புடன்
கைகுலுக்கி கண்ணடித்துச்சென்றுவிட்டது.
Share |
0 comments
Labels: கவிதை

நீ, நான் மற்றும் சிவப்பு ஆறு

அழுதுகரைத்த உன் ஞாபகங்கங்களின்
ஒவ்வொரு துளியும் பெருகி
சகிக்காத ஒரு சிவப்பு ஆறாய்
என் எல்லா பாதைகளின் ஓரங்களிலும்
துரத்தி வந்தது

முதலில் மிரட்டியது
மிரண்டேன்
கட்டளையிட்டது
அடிபணிந்தேன்
பிறகு,
களிம்பு பூசிவிடும் நண்பனானேன்
கொஞ்சம் விழித்தேன்
அதன்பின்
கவனிப்பிற்காகவும் பிறகு அன்பிற்காகவும் கெஞ்சியது
உதசினப்படுத்தினேன்
அழுதது.
இப்போது,
சிறு பையன்கள் மூத்திரம் போகும் சாக்கடையானது.

  • உயிரோசையில் பிரசுரமான கவிதை.

Share |
0 comments
Labels: உயிரோசை, கவிதை

ஆழமாய்ப் புதைத்தல்

நிதானமாய் பலநாட்கள் யோசித்து
திடமான ஒருமுடிவென்று நினைத்துதான்
அன்றைய இரவில்
குளிரில் விரல்கள் எரிய
ஆழமாய் புதைத்தபின்
காலையில் முளைத்துநிற்கும் 
உன்மீதான என் காதலை
நீரூற்றி வளர்க்காமல்
என்ன செய்ய?
Share |
2 comments
Labels: கவிதை

திரும்பியிருக்கலாம்!

தெரியாமல் என் தோள் பார்த்து தொட்டுவிட்டாய்
சிணுங்கிவிட்டு என் கவனிப்பை உறுதிபடுத்திக்கொண்டாய்
சட்டை பொத்தான் போட்டு என் மார் வருடிக்கொண்டாய்
நடக்கையில் கைகலுரசும்போதைய என் மௌனத்தை கவனித்துக்கொண்டு,
முத்தங்கள் முடித்தபின் உன் சிவந்த கண்ணில்
என் கண்களை மாறிமாறி பார்த்துக்கொண்டாய்
ஏககாலத்தில் இத்தனையும் தாண்டி நடந்துகொண்டிருக்கையில்
நொடிப்பொழுதில் விலகி
திரும்பிப்பார்க்காமல் போகிறாய்
திரும்பியிருக்கலாம்
திரும்ப விரும்பவில்லையோ என்னவோ.
Share |
2 comments
Labels: கவிதை
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு
Online-ல் வாங்க படத்தை கிளிக் செய்யவும்

பிடித்தவை

பதிமூன்று அற்புத விளக்குகள்


எங்கள் வீட்டில் இரண்டு விளக்குகள் இருக்கின்றன

ஒன்று

அப்பா சாவதற்காக வாங்கிய

பூச்சிமருந்து பாட்டிலால் ஆனது

அவரைச் சாத்திவைத்திருந்த அதே மாடத்தில்தான்

இக்கணம் அது நின்று எரிகிறது

சர்க்கார் உடுப்பில் வந்தவர்கள்

வைக்கோல் நிறத்திலிருந்த வயற்பத்திரத்தைப் பிடுங்கிப்போனார்கள்

வண்டிச்சக்கர மை அழிவதற்கு முன்

பெருவிரலை வெறிநாய்க்குக் கடிக்கக் கொடுத்தார் அப்பா

இல்லாத வெள்ளாமைக்கு பூச்சிமருந்து வாங்கி

நான்கு விரல்களால் ஏந்திக் குடித்தார்

சாக்குத் தைக்கும் ஊசியால் மூடியில் துளையிட்டு

கோடித்துணித் திரியும் மண்ணெண்ணெயுமாக

இந்த விளக்கு உருவானது

இதன் வெளிச்சத்தில்தான் நான்

உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் படித்தேன்

இவற்றைக்கொண்டு

‘அப்பா எப்படிச் செத்தார்?’ என்று எழுதமுடியுமென்றாள் அம்மா

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது

‘எலே ராசா.. இதுக்குள்ளதான்யா உன் தலயெழுத்து இருக்கு’ என்றாள்

எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது

இரண்டாவது விளக்கைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்

இது

முதலும் கடைசியுமாக அம்மா குடித்த

பிராந்தி பாட்டிலால் ஆனது

அடுப்புக்கு அருகே அதன் நிரந்தர இடம்

அம்மா தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்

நானும் சேர்ந்துகொண்டேன்

யார் யாரோ காரணம் கேட்டார்கள்

ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை

அரைத்தூக்கத்தில் அவளாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்

“எஞ் சேல பூவையெல்லாம் ராத்திரியில் வித்துப்புட்டேன்

கொப்பங் கடனுக்குத்தான் சாவாம செத்துப்புட்டேன்

உடுத்தாலும் அம்மணம்தான்

உசிரு இருந்தாலும் நாம்பொணந்தான்...”

இருமல் மருந்துகளைக் கொண்டு

நுரையீரலோடும் மூச்சுக்குழாயோடும் அன்றாடம் மல்லுக்கட்டுகிறாள்

இந்த வருஷம் மட்டும் 11 பாட்டில்கள் (எல்லாம் வடிவானவை)

எங்கள் ஊர்ப்பக்கம் நீங்கள் வந்தால் பார்க்கலாம்

கிழக்குத்தெரு குடிசைகளின் விளக்குத் திரிகளில்

பிரகாசித்துக் கொண்டிருப்பவை அம்மாவின் பிராயத்துக் கண்கள்

அதில்தான் எவ்வளவு ஒளி!


- வெய்யில் (விகடன் தடம், 01.11.2016)

RSS

RSS
Subscribe to கூர்தலறம்

Translate

Followers

About Me

TKB காந்தி
View my complete profile

Labels

  • photography (6)
  • அறிவியல் (9)
  • உயிரோசை (4)
  • கட்டுரை (5)
  • கதை (1)
  • கவிதை (43)
  • கற்பனை (1)
  • கேன்சர் (4)
  • பரிணாமம் (4)
  • புனைவு (1)

Blog Archive

  • ►  2018 (4)
    • ►  August (1)
    • ►  July (3)
  • ►  2017 (1)
    • ►  March (1)
  • ►  2016 (2)
    • ►  July (1)
    • ►  February (1)
  • ►  2015 (2)
    • ►  October (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  February (1)
  • ►  2011 (6)
    • ►  November (1)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2010 (6)
    • ►  December (3)
    • ►  June (1)
    • ►  February (2)
  • ►  2009 (27)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (1)
    • ►  May (1)
    • ►  April (3)
    • ►  March (2)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ▼  2008 (12)
    • ▼  December (11)
      • பிரிவுப்பேச்சுகள்
      • சிதறல்கள்
      • தன்வினை
      • சுருக்கங்கள்
      • தனிமை
      • மகான்களின் புகைப்படங்கள்
      • நேயர் விருப்பம்
      • And then...
      • நீ, நான் மற்றும் சிவப்பு ஆறு
      • ஆழமாய்ப் புதைத்தல்
      • திரும்பியிருக்கலாம்!
    • ►  April (1)

Rights & Disclaimer

All rights reserved.

Disclaimer:
The photographs I post here are mine unless stated beneath the photograph with relevant sources as 'photo courtesy'. I try to link the original source of the photos. Copyright is to all the respective websites/photographers and they will be removed in case of any copyright violation.

Visitors

Total Pageviews

19,259
TKB Gandhi. Powered by Blogger.