Wednesday, September 02, 2009

சிலுவை

என் போலவே
சிதறியிருந்த கூட்டத்தில்
அவள்மட்டும்
எனை
உருக்கிடும் ரசாயனங்களை 
செய்து கொண்டிருந்தாள்.
கரைந்துகொண்டிருந்தேன்.
கடற்கரையில்
நாற்பது டிகிரி வடக்கில்
தனியாய்
அமர்ந்த அவளுக்கு
கண்மூடி ஜீவரகசிய
முத்தமிட்டேன்.
இதழ் பிரிக்கையில்
நூல் அறுந்து
ஒட்டிகொண்ட
எச்சில் குமிழிகளில்
தொடங்கி 
கொட்டிய நீரைப்போல்
படர்ந்து
நிரம்பிவழிந்து கொண்டிருந்தாள்.
சிவந்த கண்களுடன்
மொழியின் வசமற்று
வாய் பிளந்து...
கண் திறக்கும் 
பொழுதிற்க்குள்
என் காலடியில்
எனக்கான சிலுவை
முளைத்துக்கொண்டிருந்தது...

Photo courtesy: tbclink.org
-

7 comments:

  1. நன்றி மண்குதிரை மற்றும் ஸ்ரீ

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு காந்தி.

    ReplyDelete
  3. ARUMAI........ "கண் திறக்கும்
    பொழுதிற்க்குள்
    என் காலடியில்
    எனக்கான சிலுவை
    முளைத்துக்கொண்டிருந்தது.."

    ReplyDelete
  4. அருமை

    ReplyDelete
  5. நன்றி பிரதீப் மற்றும் புனிதா :)

    ReplyDelete