Tuesday, February 02, 2010

நொடிக்கொரு துளி



நாளைக்கான சமன்பாட்டில்
தவிர்க்கயியலாமல்
நேற்றைய என் சிதையும்
இன்றைய எச்சமும்
எப்படியும் ஒட்டிக்கொள்கின்றன...
கதறியழுத பின்னும்
மாறமுடியாத என்னை
தீயிலிடுவதாய் எழுதி
பேனா முனை நசுக்கியிருக்கிறேன்
ஏழாவது முறையாய்.
என் கதவுகளினுள் இன்றும்
பூட்டியே கிடக்கிறேன், 
என்றாவது விழித்துப்பார்க்கையில்
நானற்றதாகவே படுகிறது உலகம்.
முத்து, சிவக்குமார், சங்கர் வரிசையில் 
நாளை நானுமிருக்கலாம்!
என்ன செய்ய
அனைத்தையும்
வேடிக்கை பார்த்திருப்பதைத் தவிர..?
நொடிக்கொரு துளியாய்
சிந்திக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-

8 comments:

  1. //நொடிக்கொரு துளியாய்
    சிந்திக்கொண்டிருக்கிறது
    வாழ்க்கை//

    சரியாச்சொல்லி இருக்கறீங்க...

    ReplyDelete
  2. //என் கதவுகளினுள் இன்றும்
    பூட்டியே கிடக்கிறேன்,
    என்றாவது விழித்துப்பார்க்கையில்
    நானற்றதாகவே படுகிறது உலகம்.

    very nice..

    ReplyDelete
  3. நல்லா இருக்கு...

    /என் கதவுகளினுள் இன்றும்பூட்டியே கிடக்கிறேன், என்றாவது விழித்துப்பார்க்கையில்
    நானற்றதாகவே படுகிறது உலகம்./
    வேற வழி இல்ல... பூட்டை உடைச்சாவது வெளிய வந்துதான் ஆகணும்!

    ReplyDelete
  4. ரொம்ப பிடிச்சிருக்கு காந்தி.

    ReplyDelete
  5. நன்றி சங்கவி :)

    நன்றி கார்த்திக் :)

    நன்றி ப்ரதீப் :)

    நன்றி ராஜாராம் :) உங்கள் கவிதைகளை வாசித்தேன் மிகவும் அருமை :)

    ReplyDelete
  6. நிறைய எழுதுங்க..:))

    ReplyDelete
  7. நன்றி கார்த்தி :)

    ஊக்கத்திற்க்கு நன்றி ஷங்கர் :)

    ReplyDelete