Thursday, May 21, 2009

போதி மரம்

பாசி பருகிக்கொண்டிருக்கும்
குளமொன்றின் முனகல்
கேட்டவொரு
ஞாயிறு பிற்பகல் கனவில்
புத்தர் தோன்றினார்.
அவர் கண்ட
நான்கு உண்மைகளை
தேஜஸ் வழிய
பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்,
லேசாகிக்கொண்டிருந்தது மனது...
அவர் போதிமரத்தடியில் இல்லை
எங்கு தேடியும்
போதி மரத்தை காணவேயில்லை,
அது புத்தராய் இருக்காதேன்று
எழுந்து 
சோம்பல் முறித்துக்கொண்டேன்.

-

11 comments:

  1. //அவர் போதிமரத்தடியில் இல்லை
    எங்கு தேடியும்
    போதி மரத்தை காணவேயில்லை,
    அது புத்தராய் இருக்காதேன்று
    எழுந்து
    சோம்பல் முறித்துக்கொண்டேன்.//

    அருமையான கவிதை வரிகள் காந்தி...

    ReplyDelete
  2. நன்றி புதியவன் :)

    ReplyDelete
  3. கவிதை நல்லா இருக்குங்க

    ReplyDelete
  4. நல்லா இருக்கு காந்தி

    ReplyDelete
  5. நன்றி மண்குதிரை :)

    ReplyDelete
  6. அடையாளம் பற்றி நல்ல ஒரு கவிதை ...

    ReplyDelete
  7. Romba nallaa irukkunga Gandhi.. :))

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்கு காந்தி.. :)

    ReplyDelete
  9. வாவ் அருமையா இருக்குங்க :-)

    ReplyDelete
  10. nerthiyana varigal. arumaiyana kavithai. keep it up.

    ReplyDelete