Tuesday, April 28, 2009

இடுக்கண் கலைவதாம்...


எல்லாவற்றின் நடுவிலும்
அவனுக்கேற்பட்ட
விபத்தே அரைநாளாய்
கவனம் கலைத்தது.
அவசரமாய் கிளம்பி
பார்த்துவிட்டு வருகிறேன்.
வெள்ளை பேண்டேஜுடன் தடித்திருந்தது
அவன் வலக்கை,
நெற்றியில் நான்கு தையல்.
ஒன்றும் பெரியதாய் ஆகிவிடவில்லை!
கொஞ்சம் நிம்மதி.
உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு
வருந்திவிட்டு
ஒரு வாய் காப்பி குடித்து
டிஞ்சர் வாசத்துடன் வந்துவிட்டேன்.

இப்போதெல்லாம்
அடிக்கடி கனவு காட்டிக்கொண்டிருக்கிறது
அவனையும்,
கைமாத்தாய் வாங்கிய
முன்னுற்றி சொச்சம் ரூபாயையும்,
அவன் சொல்லவேண்டிய
ஒரு
தேங்க்ஸையும்.


-

12 comments:

  1. \\இப்போதெல்லாம்
    அடிக்கடி கனவு காட்டிக்கொண்டிருக்கிறது
    அவனையும்,
    கைமாத்தாய் வாங்கிய
    முன்னுற்றி சொச்சம் ரூபாயையும்,
    அவன் சொல்லவேண்டிய
    ஒரு
    தேங்க்ஸையும்.\\

    காந்தி கவிதை மிகவும் பிடித்திருக்கிறது,

    உயிரோசையில் தங்கள் கவிதை படித்தேன், வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //இப்போதெல்லாம்
    அடிக்கடி கனவு காட்டிக்கொண்டிருக்கிறது
    அவனையும்,
    கைமாத்தாய் வாங்கிய
    முன்னுற்றி சொச்சம் ரூபாயையும்,
    அவன் சொல்லவேண்டிய
    ஒரு
    தேங்க்ஸையும்.//

    யதார்த்தமான வரிகள்...
    கவிதை நல்லா இருக்கு காந்தி ...

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை.
    அருமையா எழுதியிருக்கீங்க,காந்தி.

    உயிரோசையில் உங்கள் 'என்.ஆர்.ஐ பொழுதுகள்' படித்தேன் பிடித்திருந்தது. வாழ்த்தகள்.

    ReplyDelete
  4. கவிதை நன்று :))

    ReplyDelete
  5. மிச்சங்கள் எப்போதுமே அச்சமூட்டுபவை தான் ... அது நட்போ பகையோ ... ரசித்தேன்

    உயிரோசையில் உங்கள் 'என்.ஆர்.ஐ பொழுதுகள்' படித்தேன் ... a nice evocative poem ... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சில இடங்களில் இது யதார்தம் :) நன்றி புதியவன்.

    ---

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி முத்துராமலிங்கம் :)

    ---

    கவிதாயினிகிட்டயே குட் வாங்கிட்டேன் :) நன்றி ஸ்ரீ.

    ---

    வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நந்தா :)

    ReplyDelete
  7. நல்லா இருக்கு காந்தி.

    ReplyDelete
  8. //கவிதாயினிகிட்டயே குட் வாங்கிட்டேன் :) நன்றி ஸ்ரீ.//

    Why this murderveri?? :)) Title ippo innum apt-ah irukku.. :)))

    ReplyDelete
  9. உயிரோசை கவிதை நல்ல்லாருக்கு காந்தி. இதுவும் நல்லா இருக்கு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நன்றி மண்குதிரை முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் :)

    ---

    அப்போ நீங்க எல்லாரும் சொல்ற கவிதாயினி இல்லையா? ;)

    ---

    நன்றி ரவிஷங்கர், வசிஷ்டர் வாயால்... :)

    ReplyDelete