கிழித்த நாட்களின்
தவணை நினைவுகளை
அவள் நிரம்பிய சவப்பெட்டியில்
திணித்து
புதைக்கவைத்தது
நேற்று சந்தித்தவளின்
ஈஸ்ட்ரோஜன் வழியும் நளினம்.
ஒற்றைப் பார்வையில்
ஒளிபரப்பிக்கொண்ட
சம்மதங்கள் தாண்டி
பற்றியெறித்தது ஆதிக்கனல்.
சாம்பலாகையில்
எப்படியெனத் தெரியாமல்
நெருக்கமாகிவிட்டாள்
முன்னவளை விட
ஒரு சதமேனும்!
Photo courtesy: zycu.com
-
பரிணமித்திருக்கிறது.
ReplyDeleteகவிதை நன்று.
(பட உருவாக்கத்தின் நோக்கம் என்னவோ தெரியாது ஆனால் இங்கு) பொருத்தமான படம்.
"ஈஸ்ட்ரோஜன் வழியும் நளினம்"
"ஒளிபரப்பிக்கொண்ட சம்மதங்கள்"
இவை நல்லா இருக்கு...
வாழ்த்துகள்.
ReplyDelete//எப்படியெனத் தெரியாமல்
ReplyDeleteநெருக்கமாகிவிட்டாள்
முன்னவளை விட
ஒரு சதமேனும்//
வாழ்த்துகள்.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு காந்தி
ReplyDeleteம் நடக்கட்டும் நடக்கட்டும் :)
நன்றி ப்ரதீப், இந்த படத்தவிட பெட்டரா வேற கெடைக்காது இந்த கவிதைக்கு.
ReplyDelete-
நன்றி யாத்ரா, :D
//ம் நடக்கட்டும் நடக்கட்டும் :)//
ReplyDeleteஅதே அதே.. :))