Sunday, March 12, 2017

மையிருட்டு


மாங்கல்ய மஞ்சள்
வீணையிசை
புல்லாங்குழல் காற்று
கற்பூர வாசனை
தங்க ஒளி
தாமிரத்தண்ணீர் 
ஸ்படிக வெளிச்சம் 
அடைகாத்தலின் சூடு
நிசப்தம்
மனைவியின் காதல்
களவினப்பறம் அவள் பார்வை

இவையனைத்தும் திகட்டிக் கடந்தவொரு
மார்கழி முன்னிரவில்
ஆறாத கொடும் பசியுடன்
என் உணர்கொம்புகளால்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...
நிலைகொண்ட,
கணப்பிறழ்வு திகட்டாத
மையிருட்டின் ஸ்பரிசம்.

நிகழ்ந்து கொண்டிருக்கும் 
நிறைவற்ற ஜ்வாலையில்
பயணிக்கும் சிற்றெரும்பு நான்.
சுற்றியிழுக்கும் இதன் விளிம்புதாண்டி
அடர் இருட்டு பாய்மம்
அடையாவிடின்
வாழ்ந்து மரிப்பது
தற்கொலையோ?

02.03.2017
---

No comments:

Post a Comment