Tuesday, March 03, 2015

கூழாங்கல்


ஓயாத அலையாய்
அடித்துக்கொண்டேயிருக்கிறது
என்றோ
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய்
உணரவைத்த நம்
காதல்

பேய் மழையாய்
துவங்கி
பெரும் வெள்ளமாய்
தொலைந்தே விட்டது
திருமணத்தில்.

அடியாழத்து பாசிபடர்ந்த
கூழாங்கல்லாய்
நமக்குள்தான் 
எங்கேயோ இருக்கக்கூடும்.

மாலையில் கீழ்வானம்
வரைந்து வைக்கும் 
ஆரஞ்சு நிறங்களில்
தேடிப் பார்ப்போம்.
இன்றும் தென்படவில்லையென்றால்
பரவாயில்லை...
நாளைக்கு உன் வசதியெப்படி?

-
Photo courtesy: © Romantic couple by the ocean at sunset

2 comments: