Saturday, November 12, 2011

ஜீவசலனம்


(Photo courtesy: © Gregory Reade sculpts)

பேருருவ அவமானம்
தாங்காமல்
ஒவ்வொரு முறையும்
நெடுந்தொலைவு கடந்தபின்னும்
விநோதமானவொரு சூன்யத்தில்
ஒருக்களித்து சாய்ந்து
கண்ணீர் கொட்டி
காத்திருக்கிறதென் ஜீவசலனம்.

என் மூச்சுக் காற்றில்
ஊளையிட்டு அலையுமது
விழுங்கியே வைத்திருக்கிறது
எனையும், இன்னபிற
எனைப் பற்றியவைகளையும்.

ஒவ்வொரு முறையும்
முளைத்து,
எத்தனித்து,
விடைத்துப் படருமென் எலும்புகளை
ருக்கி, கூழாக்கி,
கூப்பிடுதூரத்தில் புதைத்து, மக்கச்செய்யும் அது
என் நிழலில் ஒளிந்து
அடுத்த சந்தர்பம் எதிர்நோக்கிக்
கடுந்தவமிருக்கும்!

எஞ்சியிருக்கும் நம்பிக்கையிழப்பின்
ஒட்டுமொத்த சூன்யத்தில்
அகாலமாய் இறக்குமென்னால்
ஒரு நொடி
மெளனத்தை கூட
அஞ்சலியாக்க முடியவில்லை
எனக்காக!

-